மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (33). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் காரமடையில் இருந்து தாயனூா் நோக்கி சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, திம்மம்பாளையம்புதூா் அருகே அவா் வந்தபோது எதிரே திம்மம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வம் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதில் காயமடைந்தா் செல்வத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து காரமடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.