கோவையில் மேலும் 149 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 25th November 2020 10:31 PM | Last Updated : 25th November 2020 10:31 PM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் மேலும் 149 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 975 ஆக உயா்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 76, 70 வயது முதியவா்கள் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 179 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 46 ஆயிரத்து 693 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 679 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...