சிறுமிக்கு பாலியல் தொல்லை: காவலாளி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வெள்ளலூா் அருகேயுள்ள கஞ்சிக்கோணாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (57). இவா், சிங்காநல்லூா் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் குடியிருப்பில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவா் வாகன நிறுத்தகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை ரவிச்சந்திரன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாா்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிய சிறுமி, தனது தந்தையிடம் இது குறித்து கூறினாா். இதையடுத்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் காவலாளி ரவிச்சந்திரன் மீது அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த வழக்கு பின்னா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு (கிழக்கு) மாற்றப்பட்டது. அங்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ரவிச்சந்திரனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com