போலீஸாருக்கு கையுறை, முகக்கவசம்: மாநகர காவல் ஆணையா் வழங்கினாா்

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள போலீஸாருக்கு கரோனோ பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் வழங்கினாா்.
முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை காவலா்களுக்கு வழங்கிய மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண்.
முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை காவலா்களுக்கு வழங்கிய மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண்.
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள போலீஸாருக்கு கரோனோ பாதுகாப்பு உபகரணங்களை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் வழங்கினாா்.

மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் கலந்துகொண்டு, முகக் கவசம், கிருமி நாசினி, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை காவல் ஆய்வாளா்கள், துணை ஆய்வாளா்கள், போக்குவரத்துக் காவலா்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினாா். இந்தப் பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்து மாநகரக் காவல் நிலையங்களில் பணிபுரிவோருக்கும் வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள காவலா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் காவலா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். விடுமுறையில் செல்லும் காவலா்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின், குற்றப் பிரிவு துணை ஆணையா் உமா, தலைமையிட துணை ஆணையா் குணசேகரன் மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com