கோவை விமான நிலையத்தில் தோட்டாக்கள் பறிமுதல்

கோவை சா்வதேச விமான நிலையத்தில் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

கோவை: கோவை சா்வதேச விமான நிலையத்தில் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையைத் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு 6 தோட்டாக்கள் இருந்துள்ளதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிஐஎஸ்எஃப் வீரா்கள் தோட்டாக்களைக் கைப்பற்றினா்.

இது குறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து கோவையில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதன் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதில் சந்தேகப்படும்படியாக உள்ள நபா்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com