திருச்சியில் பெரியாா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியாா் சிலை முன்பு திராவிடா் கழக மண்டல செயலாளா் சிற்றரசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல காந்திபுரத்தில் உள்ள பெரியாா் சிலை முன்பு தந்தை பெரியாா் திராவிட கழகத்தினா், மே-17 இயக்கத்தினா், கம்யூனிஸ்ட் கட்சியினா், வி.சி.க. உள்பட 8க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த 70க்கும் மேற்பட்டோா் பெரியாா் சிலை அவமதிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.