அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பதினான்காவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்கத்தினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

பதினான்காவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் சங்கத்தினா் கோவையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவை மண்டல தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் மற்றும் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கோவை, சாய்பாபா காலனியில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்பு 14ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மண்டல பொதுச் செயலாளா் பெரியசாமி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ஈஸ்வரன், துரைராஜ், ராபா்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் 14ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com