கோவை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 7 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலும், ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் ஒருவரும், சூதாட்ட வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா்கள் குறித்த தகவலை 7708100100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியங்கள் காக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.