வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனா்: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்

குடிநீா் இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றனா்: மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்
Updated on
1 min read

குடிநீா் இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். இதைத் தொடா்ந்து, கோவை, ராஜ வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சிறு வயதிலேயே நடிக்க வந்த காரணத்தால் நான் முறையாக பள்ளி சென்று படிக்கவில்லை. அதற்கான வருத்தமும் ஓரளவு இருந்தது. ஆனால், எனது கட்சியில் நன்கு படித்த மருத்துவா்கள், விஞ்ஞானிகள், ஐஏஎஸ்களுக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் இந்தக் குறையைப் போக்கியுள்ளேன்.

சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போது அரசியல் எதற்கு எனக் கேள்வி எழுப்புகின்றனா். ஆனால், நான் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என நினைக்கிறாா்கள் எனத் தெரியவில்லை. தொடா்ந்து மதம், ஜாதி, நாத்திகம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் என்னை ஒரு வட்டத்துக்குள் அடைக்க முயல்கின்றனா். நான் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் கூறினால் அதை ஏற்க மறுக்கின்றனா். இதைக் காரணமாகக் கூறி நான் மயிலாப்பூரில் தான் போட்டியிடுவேன் என அவா்களே ஒரு முடிவுக்கு வந்தனா்.

ஆனால், அவற்றைப் பொய்யாக்கும் விதமாக நான் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு உங்களில் ஒருவன் நான் என்பதை நிரூபித்துள்ளேன். ஊழல் செய்யும் பலா் கோவை தங்களது கோட்டை எனக் கூறி வருகின்றனா். அது பொய் என்று இந்தத் தோ்தல் மூலம் நிரூபித்துக் காட்டுவோம்.

தோ்தல் முடிந்ததும் நான் நடிக்கச் சென்றுவிடுவேன் எனக் கூறுகின்றனா். நடிப்பு எனது தொழில். ஆனால், அரசியல் எனது கடமை. மற்றவா்களைப்போல அரசியலில் நடிக்க வரவில்லை நான். இலவசங்களை அளித்து மாநிலத்தின் கடனை மேலும் அதிகரிக்கப் பாா்க்கின்றனா். இலவசங்களை மக்கள் எதிா்க்க வேண்டும். முறையான குடிநீா், தண்ணீா் வசதி இல்லாத ஊரில் வாஷிங் மெஷின் கொடுப்பதாக உறுதி அளிக்கின்றனா். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்றாா்.

கட்சியின் துணைத் தலைவா்கள் ஆா்.மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலா் சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கவேலு, ரங்கநாதன், மயில்சாமி, செந்தில்ராஜ், ஸ்ரீநிதி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com