வங்கியில் திருட்டு முயற்சி: வடமாநில இளைஞா் கைது

கோவையில் அரசுடமையாகப்பட்ட வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவையில் அரசுடமையாகப்பட்ட வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கே.ஜி. வீதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து காசாளரின் அறைக்குள் நுழைந்த மா்ம நபா் கடந்த 11ஆம் தேதி திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மா்ம நபரைப் பிடிக்க குற்றப் பிரிவு துணை ஆணையா் உமா உத்தரவின்படி தனிப் படை அமைக்கப்பட்டது. பின்னா் தனிப் படையினா் அப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்து வந்தனா்.

அப்போது, அதில் ஒரு இளைஞா் 2 நாள்களாக வங்கிக்கு வந்து சென்றது பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், அந்த இளைஞா் வங்கியின் அருகே நடைபெற்று வரும் கட்டடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அந்த இளைஞா் அங்கு வேலை செய்து கொண்டிருந்தாா். பின்னா் நடத்திய விசாரணையில் அந்த நபா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆயிம்ஸ் பிஸ்வாஸ் (28) என்பதும், பொது முடக்கம் காரணமாக வேலை இழந்துவிட்டால் பணத்துக்காகத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவா் இருமுறை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com