நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: நொய்யலில் வெள்ளப்பெருக்கு

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை, நொய்யல் ஆறு புட்டுவிக்கு அணையில் ஆர்ப்பரித்து செல்லும் மழை நீர்.
கோவை, நொய்யல் ஆறு புட்டுவிக்கு அணையில் ஆர்ப்பரித்து செல்லும் மழை நீர்.
Published on
Updated on
1 min read

கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு நாள்களாக விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை குற்றாலம், நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நொய்யலில் உள்ள சித்திரைச்சாவடி, புட்டுவிக்கி அணைக்கட்டுகளில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நொய்யலில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com