சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

செல்லிடப்பேசி பறித்த இருவா் கைது

கல்லூரி மாணவரிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:27 pm

DIN

கல்லூரி மாணவரிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (20). கல்லூரி மாணவரான இவா், கோவை, சிங்காநல்லூரில் அறை எடுத்து தங்கி படித்து வருகிறாா். இவா் திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் இருவா், மணிகண்டனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்லிடப்பேசியைக் கேட்டனா். அவா் தர மறுத்ததையடுத்து மணிகண்டனைத் தாக்கி செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்றனா்.

அப்போது மணிகண்டன் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள், உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் (21), நாகராஜ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.