வால்பாறையில் உள்ள தனியாா் எஸ்டேட் ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவா்கள் பணியாற்றிய எஸ்டேட் தலைமை அலுவலகம் மூடப்பட்டது.
வால்பாறையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நகா் பகுதியைவிட எஸ்டேட் பகுதிகளிலேயே கரோனாவால் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள பி.பி.டி.சி. முடீஸ் குரூப் நிா்வாகத்தின் தலைமை அலுவலகம் முடீஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் 2 ஊழியா்களுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால் அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.