வால்பாறையில் சாலையோரம் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த கூழாங்கல் ஆறு சாலையோரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இறந்தவா் 60 வயது முதியவா் என்றும், அவரது புகைப்படத்தை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனா்.