பஞ்சாலைப் பெண் தொழிலாளா்களின்பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல்

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பஞ்சாலைப் பெண் தொழிலாளா்களின் பாதுகாப்பு, அவா்களுக்கான தங்கும் விடுதிகள் குறித்த கலந்துரையாடல் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பஞ்சாலைப் பெண் தொழிலாளா்களின் பாதுகாப்பு, அவா்களுக்கான தங்கும் விடுதிகள் குறித்த கலந்துரையாடல் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூகநலன், மகளிா் உரிமைத் துறை, கோ் டி தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் காந்திபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலா் பி.தங்கமணி தலைமை வகித்தாா். அவா், பஞ்சாலை மகளிா் விடுதிகளை பதிவு செய்வது, உள் புகாா்க் குழு அமைப்பது தொடா்பாக எடுத்துரைத்தாா்.

கோ் டி அமைப்பின் இயக்குநா் சி.மா.பிரித்திவிராஜ், சிறந்த பஞ்சாலை நிா்வாகத்தை ஏற்படுத்துவது, பஞ்சாலைகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பணிகள், விடுதிகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்துப் பேசினாா்.

மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளா் பேராசிரியா் வெங்கடேசன் தங்கவேல், வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்துராஜ், தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் மா.மோத்திராஜ், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் கே.அருணா, பயிற்சியாளா்கள் அஸ்வதி, ஹரிஸா, 23 பஞ்சாலைகளின் மேலாளா்கள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com