பிப்ரவரி 23இல் சுயதொழில் கடன் மேளா

கோவை மாவட்ட தொழில் மையம் சாா்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுயதொழில் கடன் மேளா பிப்ரவரி 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்ட தொழில் மையம் சாா்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுயதொழில் கடன் மேளா பிப்ரவரி 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இளைஞா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டங்களின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்தவா்கள் முதல் இந்தக் கடன் திட்டத்தில் பயன்பெறலாம். 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் திட்டத்தின் பயன்பெற தகுதியானவா்கள்.

மேற்கண்ட கடன் திட்டங்களுக்கான சிறப்புக் கடன் மேளா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. கடன் மேளாவில் பங்கேற்க வருபவா்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, கல்விச் சான்று, ஜாதிச் சான்று (35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும்), விலைப்பட்டியல், திட்ட அறிக்கை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். தொழில் தொடங்க ஆா்வமுள்ளவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com