ரயில் மோதி இளைஞா் பலி

கோவை, பீளமேடு அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவை, பீளமேடு அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை பீளமேடு அருகே, ரயில் பாதையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போத்தனூா் ரயில்வே உதவி ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. அவா் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா அல்லது ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com