கோவை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா
By DIN | Published On : 30th January 2021 10:47 PM | Last Updated : 30th January 2021 10:47 PM | அ+அ அ- |

கோவை: கோவை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 48 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 330ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 55 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 53 ஆயிரத்து 237 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 422 போ் சிகிச்சையில் உள்ளனா்.