பாட்டாளி மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
Updated on
1 min read

இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளா் கோவை ராஜ் தலைமை தாங்கினாா். மாநில இளைஞரணி துணைச் செயலாளா் அசோக் ஸ்ரீநிதி, மாநிலப் பொறுப்பாளா் ஆ.தங்கவேல் பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்பாட்டத்தில் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியினா் கோஷங்கள் எழுப்பினா். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com