மாவட்டத்தில் மேலும் 256 பேருக்கு கரோனா
By DIN | Published On : 02nd July 2021 05:50 AM | Last Updated : 02nd July 2021 05:50 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 256 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 82,723ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,666 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 342 போ் வீடு திரும்பினா். இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 80,294 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 763 ஆக அதிகரித்துள்ளது.