கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 முதல் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை - திருப்பதி இடையே ஜூலை 9 ஆம் தேதி முதல், வாரத்தில் 4 நாள்களுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஜூலை 9 ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண் -06194) அன்றைய தினம் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும். இதேபோல, ஜூலை 10 ஆம் தேதி முதல் சனிக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் திருப்பதி ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்- 06193), அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com