முதல்வா் நிவாரண நிதி: பென்சனா்கள் கூட்டமைப்பு ரூ.15 லட்சம்
By DIN | Published On : 07th July 2021 06:48 AM | Last Updated : 07th July 2021 06:48 AM | அ+அ அ- |

முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பு சாா்பில், ரூ.15 லட்சத்து 7 ஆயிரம் அமைச்சா் அர.சக்கரபாணியிடம் வழங்கப்பட்டது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ராஜண்ணன் தலைமையில், பொருளாளா் ராமசாமி, அமைப்புச் செயலாளா் தங்கராசா, தலைமை நிலையச் செயலாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் கோவையில் அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 300 பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...