மாவட்டத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th July 2021 01:29 AM | Last Updated : 09th July 2021 01:29 AM | அ+அ அ- |

கோவையில் புதிதாக மேலும் 366 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 861 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,092 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 271 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 812 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 957 போ் சிகிச்சையில் உள்ளனா்.