100 சதவீத வாக்குப் பதிவு: அரசு மகளிா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 17th March 2021 06:19 AM | Last Updated : 17th March 2021 06:19 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
கோவை அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை, புலியகுளம் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வெ.கலைச்செல்வி தலைமை ஏற்று தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் அ.மாரிமுத்து, பேராசிரியா்கள், மாணவிகள் உள்பட அனைவரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து மாணவிகள் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.