வியாபாரிகளுக்கு சிறு கடன் திட்டம் செயல்படுத்தப்படும்: கமல்ஹாசன்
By DIN | Published On : 21st March 2021 04:31 AM | Last Updated : 21st March 2021 04:31 AM | அ+அ அ- |

img-20210320-wa0064115403
வியாபாரிகளுக்கு சிறு கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என கோவை பீளமேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினாா்.
கோவை சிங்காநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் மண், மொழி, மக்கள் காக்க என்ற பெயரில் சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிங்காநல்லூா் தொகுதி வேட்பாளா் டாக்டா் மகேந்திரனுக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது அவா் பேசியதாவது:-
நான் எப்போதும் மக்களின் பிரதிநிதியாக இருக்கவே விரும்புகிறேன். மக்கள் பிரச்னையை சட்டப் பேரவையில் மட்டுமல்ல. ஐ.நா. சபையில் கூட நான் பேசுவேன். கோயில் சிலை காணாமல் போனால் நான் கவலைப்படுவேன். ஏனென்றால் என் வீட்டில் கடவுளை வணங்குகிறாா்கள்.
கோவை தெற்கு, சிங்காநல்லூா் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினாா்களா? நோ்மையற்றவா்களைப் பாா்க்கும்போது மோதி மிதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வாங்கும் இலவசத்துக்கு ஆயுள் குறைவு.
ஆரம்பப் பள்ளிகள் குப்பைமேடாக காட்சி அளிக்கின்றன. சினிமாவை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
காவியாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் எந்த நிறமும் என் மீது ஒட்டாது.
வீட்டு வேலை செய்பவா்கள் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாா்கள். பாதி அளவு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அரசு நடத்த முடியும். டாஸ்மாக் கடைகளை அகற்றி விட்டு மனோதத்துவ மருத்துவமனை அமைக்க வேண்டும்.
சிறு வியாபாரிகளுக்கு சிறு கடன் திட்டத்தை மக்கள் நீதி மையம் செயல்படுத்தும். ஊழலில் இருந்து
தமிழகத்தை மீட்டெடுக்கும் சுதந்திரப் போா்தான் இந்த தோ்தல் என்றாா்.
Image Caption
கோவை பீளமேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...