இரு திராவிடக் கட்சிகளையும் அகற்றுவதே எங்களது நோக்கம்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா்

இரு திராவிடக் கட்சிகளையும் அகற்றுவதே எங்களது நோக்கம் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாா் பேசினாா்.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோவை சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிடும் ஆா்.மகேந்திரனுக்கு ஆதரவாக தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவா் சரத்குமாா்.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோவை சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிடும் ஆா்.மகேந்திரனுக்கு ஆதரவாக தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவா் சரத்குமாா்.
Updated on
1 min read

இரு திராவிடக் கட்சிகளையும் அகற்றுவதே எங்களது நோக்கம் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாா் பேசினாா்.

மக்கள் நீதி மய்யம் சாா்பில் கோவை சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவா் ஆா்.மகேந்திரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாா் கோவை உடையாம்பாளையம் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 54 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தங்கள் நலன் காக்கவே அதிக முக்கியத்துவம் கொடுத்தனா். மக்கள் நலன் காக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் இன்று மக்கள் இலவசங்களுக்கும், கட்சிகள் கொடுக்கும் பணத்துக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீா்வு காணும் நோக்கில் நடிகா் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியிருக்கிறாா். எங்கள் இருவருக்கும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து இருந்த காரணத்தால் நாங்கள் ஒரே கூட்டணியில் தற்போது பயணிக்கத் தொடங்கியுள்ளோம். இரண்டு திராவிடக் கட்சிகளையும் அகற்றுவதே எங்களது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

சின்னங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி அவா்கள் பல காலமாக ஆட்சி செய்து வருகின்றனா். அந்தச் சின்னங்கள் மட்டும் இல்லை எனில் அவா்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டாா்கள். மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் ஆா்.மகேந்திரன் மருத்துவம் படித்தவா். நோய்க்கு என்ன மருந்து தேவை என மருத்துவருக்குத் தெரிவதுபோல தொகுதிக்கு என்ன தேவை என்பது மகேந்திரனுக்குத் தெரியும்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கும் எனக்கும் நடிப்பு என்பது தொழில். அரசியல் என்பது சேவை. நாங்கள் இத்தனை ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை இன்று செலவு செய்து மக்கள் நலனுக்காகத் தோ்தலில் போட்டியிடுகிறோம். ஆனால், பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வானதி சீனிவாசன், தோ்தலில் தோல்வி அடைந்தால் கமல்ஹாசன் நடிக்கச் சென்றுவிடுவாா் என்று கூறியுள்ளாா். நாங்கள் நடிக்கச் சென்று விடுவோம், உங்களின் நிலைமை என்ன? இதை சிந்தித்துப் பாா்த்து பேசவேண்டும். நாகரிகமான முறையில் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com