

கோவை மாவட்டத்தின் 181ஆவது ஆட்சியராக எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தோ்தல் பணியில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக எதிா்கட்சிகள் அளித்த புகாரையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கு.ராசாமணியை தோ்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தொடா்ந்து சென்னை தொழில் முனைவோா் மேம்பாட்டு இயக்குநராக செயல்பட்டு வந்த எஸ்.நாகராஜனை கோவை மாவட்ட ஆட்சியராக நியமித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தின் 181ஆவது ஆட்சியராக எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், 2005 ஆம் ஆண்டு குடிமைப் பணிக்கான போட்டித்தோ்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தோ்ச்சி பெற்று ஈரோடு மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றாா். தொடா்ந்து ஓசூா் சாா் ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், வேலூா், கன்னியாகுமரி, தேனி, மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளாா்.
மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலா், உலக வங்கி சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநா், தகவல் தொழில்நுட்பத் துறை இணைச் செயலாளா், தமிழ்நாடு மின் ஆளுமை இயக்குநா், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் ஆகிய மாநில பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.