கோவையில் மேலும் 147 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th March 2021 03:29 AM | Last Updated : 25th March 2021 03:29 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 563 ஆக உயா்ந்துள்ளது. தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 95 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 995 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 879 போ் சிகிச்சையில் உள்ளனா்.