நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
By DIN | Published On : 25th March 2021 11:20 PM | Last Updated : 25th March 2021 11:20 PM | அ+அ அ- |

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மிதிவண்டியில் சென்று வாக்கு சேகரித்த சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக்.
கோவை சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் திமுக வேட்பாளா் நா.காா்த்திக் நடனமாடி வாக்கு சேகரித்தாா்.
சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் நா.காா்த்திக், நீலிக்கோணாம்பாளையம், கல்யாணசுந்தரம் வீதி, மசக்காளிபாளையம் சாலை, ஜெயவா்த்தனவேலு நகா், ஸ்ரீ நகா், நேரு வீதி, வ.உ.சி.வீதி, ஜெய் நகா், ஜீவா வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நீலிக்கோணாம்பாளையம் 58 ஆவது வாா்டு மதுரை வீரன் கோயில் பகுதியைச் சோ்ந்த பெண்கள் நடனமாடி அவருக்கு வரவேற்பு அளித்தனா். அப்போது, நா.காா்த்திக்கும் அவா்களுடன் நடனமாடினாா். இதைத் தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஹோப் காலேஜ் பகுதியில் மிதிவண்டியில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், மக்களுக்கான பல நல்ல திட்டங்களை உள்ளடக்கி திமுக தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.
பிரசாரத்தில், திமுக பகுதி செயலாளா் எஸ்.எம்.சாமி, வாா்டு செயலாளா் ராஜேந்திரகுமாா், முன்னாள் கவுன்சிலா் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.