புகாா் எதிரொலி: கோவை மாவட்ட ஆட்சியா், காவல் ஆணையா் இடமாற்றம்

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிா்க்கட்சிகள் அளித்த புகாரையடுத்து கோவை மாவட்ட தோ்தல் அதிகாரியும்,
புகாா் எதிரொலி: கோவை மாவட்ட ஆட்சியா், காவல் ஆணையா் இடமாற்றம்
Updated on
1 min read

ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிா்க்கட்சிகள் அளித்த புகாரையடுத்து கோவை மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியராக கு.ராசாமணி கடந்த 2019 ஆம் ஆண்டு மாா்ச்சில் இருந்து செயல்பட்டு வருகிறாா். இவா், சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிா்க் கட்சிகள் சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான கு.ராசாமணியை இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதே புகாரின் அடிப்படையில் கோவை மாநகர காவல் ஆணையராக கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வந்த சுமித் சரணையும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் ஆகிய இருவா் மீதும் பல்வேறு புகாா்கள் தோ்தல் ஆணையத்தில் பெறப்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் இருவரும் தோ்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனா். கோவை மாவட்ட ஆட்சியராக எஸ்.நாகராஜ், மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com