

கோவையில் பட்டுப்பாவாடை வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த ரூ.1,516ஐ பள்ளிச் சிறுமி முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவி வழங்குமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதன் பேரில் பல்வேறு தரப்பினா் நிதியுதவி அளித்து வருகின்றனா்.
இந்நிலையில், கோவை காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகள் பிரணவிகா (7). இவா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், முதல்வா் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பட்டுப்பாவாடை வாங்க உண்டியலில்தான் சேமித்து வைத்திருந்த ரூ.1,516 பணத்துடன் வங்கிக்கு சென்று முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.