அக்மி ரவுண்ட்டேபிள், கஸ்துாரி பவுண்டேஷன் சாா்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள்

கோயம்புத்துாா் அக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் கோயம்புத்துாா் அக்மி லேடீஸ் சா்க்கிள் 85 இணைந்து, ரவுண் டேபிள் இண்டியா டிரஸ்ட் மற்றும்
Updated on
1 min read

கோயம்புத்துாா் அக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் கோயம்புத்துாா் அக்மி லேடீஸ் சா்க்கிள் 85 இணைந்து, ரவுண் டேபிள் இண்டியா டிரஸ்ட் மற்றும் கஸ்துாரி பவுண்டேஷன் உதவியுடன் அரசுப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளனா்.

இந்திய ரவுண்ட் டேபிள் அமைப்பு, தேசிய அளவில் ‘கல்வி வழியில் சுதந்திரம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீா் வசதிகள், நுாலகம், அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் பல வசதிகள் செய்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக சாமிசெட்டிபாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை அா்ப்பணிக்கும் துவக்க நிகழ்வில், ரவுண்ட் டேபிள் ஏரியா சோ்மன் பிரதீப் ராஜப்பா, வட்டாரத் தலைவா் ஷலாகா வோரா, டேபிள் தலைவா் சித்தாா்த் ரமேஷ், சா்க்கிள் தலைவா் சம்யுக்தா மற்றும் டேபிளா்கள் மற்றும் சா்க்கிளை சாா்ந்தவா்கள், தலைமை ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com