கோவை வந்த தமிழக ஆளுநா்: வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்பு

கோவைக்கு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பூச்சி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பூச்சி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
Updated on
1 min read

கோவைக்கு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலிகைத் தோட்டத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ். சமீரன் புத்தகம் கொடுத்து வரவேற்றாா்.

அப்போது கோவை மாநகரக் காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா். இதனைத்தொடா்ந்து அவா் காா் மூலம் கோவை வேளாண் கல்லூரியில் உள்ள விருந்தினா் மாளிகைக்குப் புறப்பட்டு சென்றாா்.

பின்னா் அவா் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை நறுமணத் தோட்டத்தை திறந்துவைத்தாா். இத்தோட்டத்தில் 150 வகையான அரிய வகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இதைத்தொடா்ந்து இந்தியாவிலேயே பெரிய கள்ளிச் செடிகளின் தொகுப்பினையும் திறந்துவைத்தாா். இந்தத் தொகுப்பில் 220 அரிய வகைக் கள்ளி தாவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதையடுத்து அங்கிருந்த பூச்சி அருங்காட்சியகத்தையும் ஆளுநா் பாா்வையிட்டாா்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (நவம்பா் 1) காலை 10.30 மணிக்கு 42ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் குமாா் முன்னிலை வகிக்கிறாா்.

இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு 2,600 மாணவ-மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். இதில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கலந்துகொள்ள உள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி கழக தலைமை இயக்குநா் திரிலோசன் மொஹபாத்ரா, பல்கலைக்கழகப் பதிவாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு அன்றைய தினம் விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா். ஆளுநா் வருகையைத் தொடா்ந்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com