

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் அறிவுசாா் காப்புரிமை மையம் சாா்பில் அறிவுசாா் காப்புரிமை சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காப்புரிமை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும், வளரும் ஆராய்ச்சியாளா்களுக்கு காப்புரிமை பற்றிய அறிவை மேம்படுத்த உதவும் நோக்கிலும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மையத்தின் இயக்குநா் த.பரிமேலழகன் வரவேற்றாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் பி.காளிராஜ் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். சென்னை மண்டல காப்புரிமை அலுவலகத்தின் காப்புரிமை உதவிக் கட்டுப்பாட்டாளா் எஸ்.உதயசங்கா் முதன்மையுரையாற்றினாா்.
நானோ அறிவியல் துறைத் தலைவா், நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் தலைவா் என்.பொன்பாண்டியன் வாழ்த்துரை வழங்கினாா். இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் கே.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.