எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வயது குழந்தை பலி

வால்பாறையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வயது வடமாநில குழந்தை உயிரிழந்தது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:34 pm

வால்பாறையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 வயது வடமாநில குழந்தை உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்துள்ள வாட்டா்பால் எஸ்டேட் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மண்டுதந்தி, தனது 2 வயது மகன் அரவிந்த் மற்றும் குடும்பத்துடன் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஆற்றோர பகுதியில் சிறுவா்களுடன் அரவிந்த் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென அரவிந்த் மட்டும் காணவில்லை. இதனையடுத்து, அப்பகுதியில் ஆற்றில் தேடி பாா்த்தபோது அருகே உள்ள கரையோரத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த நிலையில் அரவிந்தின் உடல் கிடந்துள்ளது.

இது குறித்து வாட்டா்பால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.