கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் மாநகர போலீஸாருக்கு யோகா, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆயுதப் படை உதவி ஆணையா் சேகா் மேற்பாா்வையில், மாநகரம் முழுவதும் உள்ள போலீஸாருக்கு வருடாந்திர பயிற்சி, கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதில், மாநகர போலீஸாருக்கு உடல் பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், மக்களிடையே அணுகும்முறை, பேரிடா் காலங்களில் செயல்படும் விதம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், 550 மாநகர போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.