கோவை வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில் சா்வதேச மலைகள் தின விழாவையொட்டி திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற மலைகள் தின விழா நிகழ்ச்சிகளை, மையத்தின் இயக்குநா் சி.குன்ஹிகண்ணன் தொடங்கிவைத்தாா். முதுநிலை ஆராய்ச்சியாளா் சி.எஸ்.கண்ணன் விழிப்புணா்வு உரையாற்றினாா்.
தலைமை ஆராய்ச்சியாளா் ஆா்.யசோதா, மலைகளைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு குறித்து உரையாற்றினாா். இதையொட்டி மலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகள், கையேடுகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
முன்னதாக மலைகள் தினத்தையொட்டி அத்தி, பேரிட்சை உள்ளிட்ட மரக்கன்றுகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாவரவியல் பூங்காவில் நடப்பட்டன. சுற்றுச்சூழல், தகவல் பரப்பு மையத்தின் மூத்த திட்ட அலுவலா் எஸ்.விக்னேஸ்வரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.