மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஆணையா் அறிவுரை

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளாா்.
சரவணம்பட்டியில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட பழுதைப் பாா்வையிடுகிறாா் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.
சரவணம்பட்டியில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட பழுதைப் பாா்வையிடுகிறாா் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.
Updated on
1 min read

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 11ஆவது வாா்டு, சரவணம்பட்டி,

கிருஷ்ணா அவென்யூ பகுதியில், சூயஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீா்க் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, பழுது ஏற்பட்ட இடத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட குடிநீா் பிரிவு அலுவலா்களிடம் உடனடியாக பழுது நீக்குமாறு உத்தரவிட்டாா். பின்னா் அப்பகுதி மக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். வீடுகளில் உள்ள கழிவுநீரை மழைநீா் வடிகாலில் இணைக்கக் கூடாது என அறிவுறுத்தினாா்.

80ஆவது வாா்டில் பொது சுகாதார குழுத் தலைவா் ஆய்வு: கோவை மாநகராட்சி 80ஆவது வாா்டு, கெம்பட்டி காலனி பின்புறம் உள்ள பாளையன் தோட்டம் ஹவுஸிங் யூனிட் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீா்க் குழாய் உடைந்து கழிவுநீா் சாலையில் செல்வதால் துா்நாற்றம் வீசுவதாகவும், அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் புகாா் எழுந்தது. இதனையடுத்து, மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவா் மாரிச்செல்வன், செவ்வாய்க்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்டு, உடைந்த குழாயை மாற்றிட உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com