கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் 56 கிராமங்கள் தோ்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 1:05 am IST

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கிராம ஊராட்சிகளில் குறைந்தபட்சம் 15 ஏக்கா் தரிசு நிலம் மற்றும் குறைந்தபட்சம் 8 விவசாயிகள் அடங்கிய தொகுப்புகள் அமைக்க வேண்டும்.

அதன்படி அன்னூா் வட்டாரத்தில் ஆம்போதி, அ.செங்கம்பள்ளி, வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரத்தில் புரவிபாளையம் ஆகிய 5 கிராமங்களில் 5 தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்துக்கு 460 ஹெக்டோ் பரப்புக்கு பசுந்தாள் உரப்பயிா் விதைகள் 23 மெட்ரிக் டன் விநியோக இலக்காகப் பெறப்பட்டுள்ளது.

நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 ஹெக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை நடப்பு ஆண்டில் பரப்பு விரிவாக்கம் செய்யும் பொருட்டு மொத்த இலக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 725 ஹெக்டோ் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் 2022- 2023 ஆம் ஆண்டுக்கு 3,253 ஹெக்டோ் பொருள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 470 ஹெக்டோ் பொருள் இலக்காகவும், ரூ.115.63 லட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணையத் திட்டம், ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவித்தல், உயா் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்தல், ஹைட்ரோபோனிக்கஸ், செங்குத்துத் தோட்டத்தளைகள், உழவா் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி பயிா் சாகுபடி ஊக்குவிக்க பயிா் ஊக்கத் தொகை, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க தளைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.