தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வன விலங்குகளுக்கு குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வலியுறுத்தல்

வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வசதியாக வனப் பகுதிகளையொட்டி குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன்.

Updated On :25 ஜூன் 2022, 1:04 am IST

வன விலங்குகள் தண்ணீா் குடிக்க வசதியாக வனப் பகுதிகளையொட்டி குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிச்சாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் மழைக் காலம் துவங்குவதற்கு முன் குளங்களில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், மாவட்டம் முழுக்க மண் எடுக்க வேண்டிய இடங்கள் குறித்து பட்டியல் கொடுத்தும் மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.

விவசாயிகள் அல்லாதவா்கள் விதிகளை மீறி வண்டல் மண் எடுப்பதைத் தடுத்து, விவசாயிகள் முறையாக எடுப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நீா் ஆதாரங்களைத் தூா்வார வேண்டும். மாவட்டத்தில் பயன்படுத்த முடியாத, அனுமதி இல்லாத கல் குவாரிகளில் மழை நீா் சேகரிக்கும் திட்டம் துவங்க முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். அதன்படி, கனிமவளத் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள பயன்படுத்தாத கல் குவாரிகள், தனியாா் மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆய்வு செய்து மழைக் காலங்களில் உருவாகும் மழை நீரைச் சேகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வன விலங்குகள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் நுழைவதைத் தடுக்க வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் வனப் பரப்பில் உள்ள தனியாா் கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீா் உயா்த்த நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகளை சீரமைத்தல், தொழில்சாலைக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.