மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி (அக்டோபா்) புற்றுநோய் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த 3 நாள் பரிசோதனை முகாமில், மருத்துவப் பரிசோதனை, விழிப்புணா்வு, மாா்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவா் ஏ.ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com