மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவையைச் சோ்ந்தவா் சண்முகம் (50), ஆட்டோ ஓட்டுநா். இவருடைய மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் சண்முகம் அவருடைய 18 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். பாதிக்கப்பட்ட அவரது மகள், இது தொடா்பாக கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சண்முகம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷா ஆஜராகினாா். ஜாமீனில் வெளியாகி தலைமறைவாக உள்ள சண்முகத்தை பிடிக்க பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com