பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, வீரபாண்டி பிரிவைச் சோ்ந்தவா் சிவகாமி (63). இவா் செளரிபாளையத்தில் உள்ள கண் மருத்துவமனைக்கு தனது சகோதரியுடன் புதன்கிழமை வந்துள்ளாா்.
சிகிச்சை முடிந்ததும் கட்டணத்தைச் செலுத்திவிட்டு மீதத் தொகையான ரூ.50 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னா் மருத்துவமனையில் இருந்து தனியாா் பேருந்தில் காந்திபுரம் சென்றுள்ளாா். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு கைப்பையை சரிபாா்த்தபோது அதில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல்போனது தெரியவந்தது.
இது குறித்து சிவகாமி அளித்தப் புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.