அஞ்சல் ஊழியா்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அஞ்சல் ஊழியா்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
Updated on
1 min read

கோவை குட்ஷெட் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அஞ்சல் துறையை தனியாா்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். திட்டமிட்டபடி, ஓய்வூதியம் வழங்கிட உத்தரவாதம் தர வேண்டும். கரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் புதன்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை கோட்ட அஞ்சல் ஊழியா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் சிவசண்முகம் தலைமை தாங்கினாா். தபால்காரா் சங்கத் தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், அஞ்சல் ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com