உலக யானைகள் தினப் பேரணி

உலக யானைகள் தினத்தையொட்டி வால்பாறையில் வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
வனத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
வனத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

உலக யானைகள் தினத்தையொட்டி வால்பாறையில் வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

உலக யானைகள் தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, வால்பாறையில் வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வால்பாறை அரசுக் கல்லூரி முன்பு துவங்கிய பேரணியானது தபால் நிலையம் வரை நடைபெற்றது.

பேரணியின்போது வனங்களில் யானைகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதகைகளை பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவா்கள் ஏந்திச் சென்றனா். வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com