கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் கற்போம், வழிநடத்துவோம் (ரீட் டூ லீட்) என்ற பெயரிலான மன்றத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்றத்தை கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தொடங்கிவைத்தாா்.
மாணவா்களை பத்திரிகைகள் வாசிக்க வைப்பதன் மூலம் பொது அறிவை வளா்க்கும் நோக்கிலும், மற்ற மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மன்றம் செயல்பட உள்ளதாக விழாவில் பி.எல்.சிவகுமாா் தெரிவித்தாா்.
இந்த மன்றத்தில் தினசரி நாளிதழ்களை வாசிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், மன்றத்தின் தலைவரும் மூன்றாம் ஆண்டு மாணவியுமான ஆஷினி, செயலரும் இரண்டாம் ஆண்டு மாணவருமான பி.ராகேஷ் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
மேலும் கல்லூரியின் 80 மாணவ-மாணவிகள் இதில் உறுப்பினா்களாகச் சோ்ந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
இதில், ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா்.கருணாம்பிகை, டி.பிரபு வெங்கடேஷ் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.