கோவையில் புதிதாக 67 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 848 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு புதன்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 74 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 737 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 493 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.