கோவையில் லேசான மழை

கோவை மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னா் இரவு 7 மணியளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. இரவு வரையிலும் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது. மேற்கு மண்டல மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரையிலும் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வாளா்கள் அறிவித்திருக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com