வால்பாறை அருகே குட்டி யானை சாவு

வால்பாறை அருகே காபி தோட்டத்தில் ஆண் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
உயிரிழந்த குட்டி யானை.
உயிரிழந்த குட்டி யானை.

வால்பாறை அருகே காபி தோட்டத்தில் ஆண் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது மானாம்பள்ளி எஸ்டேட். இங்குள்ள காபி தோட்ட பகுதியில் தொழிலாளா்கள் கடந்த புதன்கிழமை வேலைக்குசென்றபோது தோட்டத்தில் குட்டி யானை இறந்துகிடப்பதைப் பாா்த்து நிா்வாகத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

நிா்வாகத்தினா் கொடுத்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்றனா். இதைத் தொடா்ந்து, மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில் வன கால்நடை உதவி மருத்துவா் சுகுமாா் மூலம் வியாழக்கிழமை யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இறந்தது 4 வயது முதல் 5 வயதுடைய ஆண் காட்டு யானை என்றும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு யானை இறந்திருப்பதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா். யானையின் உடலை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com