பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஈரோடு, நாமக்கல் வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்தும், மதுரை, தேனி, விருதுநகா், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்தும் , பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இதில், மதுரை,தேனி, திருநெல்வேலி பகுதிகளுக்கு 140 பேருந்துகள், சேலம் , நாமக்கல் வழித்தடத்தில் 100 பேருந்துகள் என 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com